ரூ.5 கோடி கேட்டு தி.மு.க., கவுன்சிலர் மகன் கடத்தல்
ரூ.5 கோடி கேட்டு தி.மு.க., கவுன்சிலர் மகன் கடத்தல்
ரூ.5 கோடி கேட்டு தி.மு.க., கவுன்சிலர் மகன் கடத்தல்
ADDED : ஆக 17, 2011 01:18 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவி பிளவர்.
இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 16வது தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு விஷால் உமேஷ் என்ற நான்கரை வயது மகன் உள்ளான். விஷால் உமேஷ் இங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். விஷாலை டிரைவர் பாலகிருஷ்ணன் தான் தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வருவார். வழக்கம் போல் இன்று காலை விஷாலை, பாலகிருஷ்ணன் பள்ளிக்கு காரில் அழைத்து போய் உள்ளார். சிறிது நேரத்தில் அவர் பள்ளிக்கு போகவில்லை என்ற தகவல் பிளவர் ராஜ்குமாருக்கு வந்தது. மேலும் டிரைவர் பாலகிருஷ்ணனின் போனில் இருந்து வேறு ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசி, தங்களது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், மகனை திருப்பி தர வேண்டுமென்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பிளவர் ராஜ்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.


