Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

ADDED : ஆக 07, 2011 08:34 PM


Google News
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 300 கி.மீ., நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, அந்த மாநிலத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கக் கூடியது.

நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், டிக்டால் மற்றும் ராம்பன் மாவட்டம், பான்தாய் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதிகளைச் சீரமைக்க முடியாத வகையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல், தடை ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது. <உதாம்பூர், நாக்ரோடா, ராம்பன், பட்னிடாப், பனியால் மற்றும் பாடோடே ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், பகல்காம் மற்றும் பால்தாலில் இருந்து, அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பயணிகள், ராம்பன் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us