திண்டுக்கல்-திருச்சி இடையே பயணிகள் மின் ரயில் இயக்கம்
திண்டுக்கல்-திருச்சி இடையே பயணிகள் மின் ரயில் இயக்கம்
திண்டுக்கல்-திருச்சி இடையே பயணிகள் மின் ரயில் இயக்கம்
ADDED : ஆக 07, 2011 07:08 PM
திண்டுக்கல்: திண்டுக்கல்- திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொருத்தி பயணிகள் ரயில் முதன்முறையாக இயக்கப்பட்டது.
திருச்சி -திண்டுக்கல் இடையே மின்மயமாக்கல் பணி மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திருச்சி-திண்டுக்கல் இடையே மின்மயமாக்கலை ஆய்வு செய்தார். முன்னதாக தென்மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு ரயில்கள், திண்டுக்கல்லில் மின்சார இன்ஜினில் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மின்சார இன்ஜின் மூலம் முதன்முறையாக திருச்சி-திண்டுக்கல் பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுவதில் இடையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், டீசல் இன்ஜின் மூலம் இயக்க ஏதுவாக டீசல் இன்ஜினும் உடன் இழுத்துவரப்படுகிறது.