/உள்ளூர் செய்திகள்/கரூர்/படிக்கும் காலத்தில் போராட வேண்டாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரைபடிக்கும் காலத்தில் போராட வேண்டாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
படிக்கும் காலத்தில் போராட வேண்டாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
படிக்கும் காலத்தில் போராட வேண்டாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
படிக்கும் காலத்தில் போராட வேண்டாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
கரூர்: கரூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி போராட்டம் நடத்திய மாணவர்களை பள்ளிக்கு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அறிவுரை கூறினார்.தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி நேற்று தி.மு.க., மாணவர் அணி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.சிறிது நேரத்துக்கு பிறகு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருவராக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க.,வினர் வேறு இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதால், ஏ.டி.எஸ்.பி., ராஜன் தலைமையிலான போலீஸார் அவர்ளை பின்தொடர்ந்தனர்.ஆனால், தி.மு.க.,வினர் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றதால் போலீஸார் உடனடியாக திரும்பி வந்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக தி.மு.க.,வினர் நேற்று நடத்திய போராட்டத்தால் கரூரில் ஒரு மணி நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.