Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

ADDED : செப் 03, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
கோவை; சென்னையைச் சேர்ந்த சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி வருகிறார். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற 'யு டியூப்' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தாக புகார் எழுந்தது. கோவை சைபர் கிரைம் போலீசாரால், 2024, மே 4ல் கைது செய்யப்பட்டார். பேட்டி வெளியிட்ட 'யு டியூப்' சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மீது, கோவை ஜே.எம். 4 கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜரானார். அடுத்த விசாரணை, 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்ததாக, சவுக்கு சங்கர் மீது, பல்வேறு மாவட்டங்களில் பதிவான, 15 வழக்குகளை ஒரே வழக்காக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கும் நேற்று ஜே.எம். 4, கோர்ட்டில் விசரணைக்கு வந்தது. இவ்வழக்குகளில், குற்றச்சாட்டு பதிவுக்காக, நவ. 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us