ADDED : ஜூலை 28, 2011 07:43 PM
புதுடில்லி : பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும், நான் நலமாக இருப்பதாகவும், எனக்கு மூளை ஸ்கேன் எல்லாம் எடுக்கப்படவில்லை என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் கல்மாடி, டெமண்டியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், இதன் ஒருபகுதியாக அவருக்கு மூளை ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்பட்டதாகவும், அடுத்த கட்ட பரிசோதனை ஆகஸ்டு 1ம் தேதியில் நடைபெற இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.


