ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
மடத்துக்குளம் : பாப்பான்குளம் தண்டாயுதபாணி கோவிலில் ஆடிமாத கார்த்திகை திருவிழா நேற்றுமுன்தினம் காலை 11.00 மணிக்கு மூலவர் அபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ராஜஅலங்காரமும் மாலை 6.00 மணிக்கு உற்சவர் அபிஷேகமும், தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. விழா நிகழ்ச்சிகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.