Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அக்கம் பக்கம்/அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

PUBLISHED ON : ஜூலை 26, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

திக்விஜய் சிங்கிற்கு கடிவாளம் ரெடி



காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கின், நடவடிக்கைகள், எல்லை மீறிப் போவதால், கட்சியின் மேலிட தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளைப் பற்றி, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதன் மூலம், பிரபலமடைந்தவர் இவர்.தீபாவளிப் பட்டாசு போல, அரசியல் களத்தை சூடேற்றும் வகையான விஷயங்களை, அவ்வப்போது, கொளுத்திப் போடுவதால், வட மாநில மீடியாக்களுக்கும், இவர் செல்லப் பிள்ளை. நாட்டில் எந்த ஒரு பரபரப்பான நிகழ்வும் நடக்காமல் இருந்தால், 'கூப்பிடு, திக்விஜய் சிங்கை' என, அவருக்கு முன், மைக்கை நீட்டி, ஏடாகூடமான விஷயங்களைப் பற்றி பத்திரிகையாளர் கேட்பர். அவரும், மீடியாக்களுக்கு தீனி போடுவது போல், வில்லங்கமான வார்த்தைகளால், ஏதாவது கூறி வைப்பார். இது தான், திக்விஜய் சிங் விஷயத்தில், தற்போது நடந்து வருகிறது.



ஆரம்பத்தில், இவரின் வார்த்தை சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்த, காங்., மேலிடம், இப்போது கவலைப்பட ஆரம்பித்து இருக்கிறது. சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., பற்றி, இவர் தெரிவித்த கருத்துக்கு, ம.பி., மாநில, பா.ஜ., இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திக்விஜய் சிங்கின் காரை மறித்து, போராட்டம் நடத்தினர்.காரில் இருந்து இறங்கிய திக்விஜய், அங்கு நின்றிருந்த பா.ஜ., இளைஞரின் கன்னத்தில், ஓங்கி ஒரு அறை விட்டார். இந்த விவகாரம், தற்போது பூதாகரமாக உருவெடுத்து விட்டது.திக்விஜய் சிங்கின் அடாவடி, அத்துமீறிப் போவதை அடுத்து, அவரது நாக்குக்கு மட்டுமல்லாமல், கைக்கும் கடிவாளம் போடுவது குறித்து, காங்., மேலிடம் யோசித்து வருவதாக, தகவல்கள் கசிகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us