ADDED : ஜூலை 24, 2011 02:24 AM
திருப்பூர் : திருப்பூரில் வாழும் கலை பயிற்சி நாளை துவங்குகிறது.பிரணாயாமம், சுதர்சனகிரியா மற்றும் எளிமையான யோகாசனங்கள், கற்று தரப்படுகின்றன.
நாளை துவங்கி, 31ம் தேதி வரை நடக்கும், வாழும் கலை பயிற்சி முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். காலை 10.00 மணி முதல் 12.30 வரை காங்கயம் ரோடு, ஏ.எஸ்., கார்டன், பால்சம் கல்சுரல் சென்டரிலும், மாலை 6.00 மணி முதல் 8.30 வரை அவிநாசி ரோடு சி.எஸ்.ஐ., சர்ச் பின்புறம் வாழும் கலை பயிற்சி மையத்தில் பயிற்சி நடக்கிறது. விவரங்களுக்கு 98431-71185 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


