ADDED : ஜூலை 19, 2011 12:09 AM
கிருமாம்பாக்கம் : பெட்டிக்கடை எரிந்து சாம்பலானது.கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 38.
இவர் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை மற்றும் டீக்கடை வைத்துள்ளார். பெட்டிக்கடை நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தனது கடைக்கு யாரோ தீ வைத்து விட்டதாக செந்தில் கொடுத்த புகாரால் கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு புனிதராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.