ADDED : ஜூலை 17, 2011 02:25 AM
ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி., சாலையை சேர்ந்தவர் முகமது அனீபா(45).
இவரது மனைவி
தில்சாத்(39). அதே பகுதியில் 'கோன் வைண்டிங்' கடை நடத்தி வருகிறார். இவரது
கடையருகே அந்தியூரை சேர்ந்த அம்ஜத்கான்(24) என்பவர் செல் ஷாப் நடத்தி
வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கடையை
பூட்டி விட்டு சென்றனர்.இவ்விரு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்
அரைபவுன் தோடு மற்றும் 3,000 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.