அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு:பயணிகள் அலறல்
அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு:பயணிகள் அலறல்
அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு:பயணிகள் அலறல்
ADDED : செப் 20, 2011 05:05 AM
தூத்துக்குடி; திருச்செந்தூர் அருகே, அரசு டவுன் பஸ் மீது மர்ம கும்பல், பெட்ரோல் குண்டு வீசியதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திருச்செந்தூருக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. குலசேகரன் பட்டணம் அந்தோணிராஜ், பஸ்சை ஓட்டினார். கிறிஸ்டோபர் அன்பன், கண்டக்டராக பணிபுரிந்தார்.இரவு 9.20 மணிக்கு, ஆலந்தலை அருகே பஸ் வந்தபோது, மெயின்ரோட்டில் கட்டைகளை போட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பஸ்சை நிறுத்தி டிரைவர் எட்டி பார்த்தபோது, அரிவாள்களுடன் அங்கு வந்த முகமூடி அணிந்த கும்பல், பஸ் கண்ணாடிகளை வெட்டியது.
இதில் முன்புற, பின்புற, பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகள் அலறியடித்து, ஓட்டம் பிடித்தனர். மர்ம கும்பல், பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படவில்லை. டிரைவருக்கு மட்டும் லேசானக் காயம் ஏற்பட்டது.தப்பிய மர்ம கும்பலை தேடிவரும் திருச்செந்தூர் போலீசார், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


