ADDED : ஜூலை 17, 2011 08:58 AM
சென்னை : தமிழகத்தில் வேதாரண்யம், திருப்பத்தூர், ஸ்ரீரங்கம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.
இந்த புதிய கல்லூரிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ காம்பிரன்சிங் மூலம் நாளை திறந்து வைக்கிறார். இந்த புதிய கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.