Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

ADDED : ஆக 01, 2011 11:52 PM


Google News
ஊட்டி : காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எல்லநள்ளி அரசு உயர்­நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்பாபு, என்.எஸ்.­ஐயா பள்ளி ஆசிரியர் சரவணன் பங்கேற்றனர்.

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் வளமான பாரதத்தை உருவாக்குவது; புற்று­நோய்களை உருவாக்கும் பான்பராக் போன்­றவற்றை தவிர்ப்பது; மாணவர்கள் சுற்றுப்­புறத்தை சுகாதாரமாக வைப்பது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூர்த்தி, செல்வகுமார், பிரேம், கட்டமொம்மன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us