ADDED : ஜூலை 24, 2011 01:11 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி அண்ணா தொழிற் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டனா அருகே மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். ஆவின் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர் அன்பழகன், சிவில் சப்ளை தொழிற்சங்க செயலாளர் முருகேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க., செயலாளர் கேசவன் வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி, பேச்சாளர்கள் ரவி, கோவிந்தன், மாவட்ட அவைத்தலைவர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முனிவெங்கடப்பன் ஆகியோர் பேசினர்.
தொகுதி செயலாளர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், துணை செயலாளர் சுந்தரேசன், மாணவர் அணி செயலாளர் தங்கமுத்து, நகர துணை செயலாளர் வெங்கடேசன், தலைவர் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


