சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார் சண்முகர்
சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார் சண்முகர்
சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார் சண்முகர்
ADDED : ஆக 25, 2011 11:46 PM

தூத்துக்குடி : திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, சுவாமி சண்முகர் தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.
இக்கோயில் ஆவணித்திருவிழா ஆக.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. ஏழாம் நாளான நேற்று மாலை, சுவாமி சண்முகர் தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில், அம்பாள்களுடன் எழுந்தருளி வீதியுலா வந்து,
பக்தர்களுக்கு காட்சியளித்தார். எட்டாம் நாளான இன்று, அவர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பத்தாம் நாளான ஆக., 28 ல்(நாளை மறுநாள்) காலை நடக்கிறது.