Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை

இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை

இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை

இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை

ADDED : செப் 08, 2011 10:34 PM


Google News

சிவகங்கை : இலவச கறவை மாடு, ஆடுகளுக்கு தீவனங்கள் முறையாக கிடைக்கிறதா என கண்காணிக்க, மாவட்டந்தோறும் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், செப்.,15ல் ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார். இதன் மூலம் 7 லட்சம் குடும்பங்கள் பயனடைவர். இதற்காக 191 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



உற்பத்தி அதிகரிப்பு: இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய, கறவை மாடுகளை, வட்டார அளவில் கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்கவேண்டும். மருத்துவ முகாம் நடத்தி, கண்காணிக்கவேண்டும். இதில் நோய் பாதித்த மாடுகளுக்கு இலவச மருந்துகள் வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கறவை மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதின் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து, ஆவினில் அதிகளவில் கொள்முதல் செய்யப்படும். இதற்கான தொகையை உடனே பயனாளிகளுக்கு வழங்குவது, இதன் மூலம் தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: உற்பத்தியை அதிகரிக்க தனி அலுவலர், மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உற்பத்தியாளர் சங்கங்களை சந்தித்து, ஆலோசனை வழங்கவேண்டும். கால்நடை தீவனங்கள் முறைப்படி கிடைக்கிறதா என கண்காணிக்கவேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us