ADDED : செப் 01, 2011 09:06 PM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி நடுத் தெருவை சேர்ந்தவர் திருவேல் முருகன்.
இவரது வீட்டையொட்டி மாட்டுத்தொழுவமும், வைக்கோல் படப்பும் உள்ளது. அருகே ஒரு திருமண வீட்டில் வெடித்த பட்டாசு நெருப்பு வைக்கோல் படப்பில் விழுந்து தீ பற்றியது. இதில் படப்பு முழுவதும் எரிந்து சாம்பலானது. வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் செபஸ்தியான் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர்.