Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
மயிலம் : மயிலத்தில் இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் காமராஜர் தெருவை சேர்ந்த ஏழுமலை மகள் மாலா,16. இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் மாணிக்கம் மனைவி சுகுணா. இவரது சொந்த ஊர் ஏரிப்பாக்கம். அந்த கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்,24 என்பவர் சுகுணா வீட்டிற்கு அடிக் கடி வந்து சென்றபோது, மாலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங் களுக்கு முன் மாலாவை கடத்தி சென்று அய்யப்பன் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து மாலாவின் தாய் மகாலட்சுமியின் புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us