ADDED : ஜூலை 26, 2011 09:55 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஜெயவிலாஸ் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக் 16 வது மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் குழந்தைவேல் பாண்டியன் தலைமை வகித்தார். ஆனந்தன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராதா துவக்கி வைத்தார். விஞ்ஞானி ராமானுஜம் '21ம் நூற்றாண்டில் அறிவியல்' என்ற தலைப்பில் பேசினார். ராமலிங்கா மில் சேர்மன் தினகரன், மாநில பொது குழு உறுப்பினர் சுரேஷ் தளியத், தேவாங்கர் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், பேராசிரியர் அமுதா பேசினர். பத்து, பிளஸ் 2 பொது தேர்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைவர் முத்துமாரி நன்றி கூறினார்.