/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சுமண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு
மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு
மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு
மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு
திண்டிவனம் : விவசாயிகள் மண் புழுக்கள் மற்றும் உரங்களை விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டி வருவதாக பேராசிரியர் ராமமூர்த்தி தெரிவித்தார்.மண்புழு உரம் தயாரித்தல் பற்றி வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் திண் டிவனத்தில் நடந்தது.
முகாமில் பேராசிரியர் ராமமூர்த்தி பேசியதாவது: இந்த திட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. விவசாயிகள் மண் புழுக்கள் மற்றும் உரங்களை விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகளுக்கு முழு விளக்கமும், செயல் முறையும் செய்து காட்டி, தயாரிப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படும். சிறிய முதலீட்டில் தங்களுடைய நிலத்திற்கு தேவையான அளவு உரத்தை தயாரித்துக் கொள்ள முடியும். வியாபார நோக்கத்திலும் அதிக பயன் பெற முடியும். ஒரு டன் கால்நடை கழிவுகள், தழைகள் ஆகியவற்றிலிருந்து 600 கிலோ மண்புழு உரம் கிடைக்கும். ஒரு டன் கழிவுப் பொருட்களுக்கு ஒரு கிலோ மண் புழு மட்டும் போதுமானது. இந்த முறையில் 45 நாட்களில் பல கிலோ மண் புழு உற்பத்தியாகும். மண்புழு ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்று லாபம் பெறலாம். இதற்கு மொத்தம் 800 ரூபாய்தான் செலவு ஏற்படும்.


