ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனி யார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப் போர் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று நடக்கிறது.
தனியார் நிறுவனங்கள் கேட்டுள்ள டிரைவர், நர்ஸ், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டெய்லர், ஹெல்பர், டர்னர், பிட்டர், மார்க்கெட்டிங் எக்சி கியூட்டிவ், ஆபீஸ் அசிஸ்டெண்ட், இன்சூரன்ஸ் ஏஜன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடக்கிறது. வேலை தேடுவோர், தகுதி யான வேலை வாய்ப்பை பெறலாம். இம்முகாம் மூலம் வேலை வாய்ப்பு பெறுவோருக்கு வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப் பட மாட்டாது, என @வலை வா#ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.