வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி
வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி
வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி
UPDATED : ஆக 20, 2011 09:47 AM
ADDED : ஆக 19, 2011 02:48 AM
புதுடில்லி:ஏர்இந்தியா நிறுவனம், வி.ஐ.பி.க்கள், வி.வி.ஐ.பி.க்களுக்கு விமான சேவை வழங்கியதில் ரூ.
158.28 கோடி செலவிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்ற ராஜ்யசபாவில் மத்திய உள்நாட்டுவிமானப் போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி பேசியதாவது: ஏர்இந்தியா நிறுவனம் 10 விமானங்களைக் கொண்டு வி.ஐ.பி.க்கள், வி.வி.ஐ.பி.க்களுக்கான விமான சேவையினை வழங்கியது. அதன்படி கடந்த 2010- 2011-ம் ஆண்டுவரையிலான காலத்தில் ஏர்இந்தியாவிற்கு விமான கட்டணமாக ரூ. 158.28 கோடி வரவேண்டியுள்ளது.அது மட்டுமின்றி ஏர்இந்தியா சேவை கட்டணமாக ரூ. 40.46 கோடி செலவிட்டுள்ளது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்


