/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் மெக்கானிக்கல் துறை கருத்தரங்கம்கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் மெக்கானிக்கல் துறை கருத்தரங்கம்
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் மெக்கானிக்கல் துறை கருத்தரங்கம்
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் மெக்கானிக்கல் துறை கருத்தரங்கம்
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் மெக்கானிக்கல் துறை கருத்தரங்கம்
ADDED : ஜூலை 29, 2011 11:42 PM
தொட்டியம்: தொட்டியம், தோளுர்பட்டி, கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் மெக்கானிக்கல் துறையின் சார்பில் இயந்திர பொறியலின் சமீபத்திய வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடந்தது.கருத்தரங்கிற்கு, மெட்டாஸ் துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில் நுட்பக்கல்லூரியின் இயந்திர துறை தலைவர் பேராசிரியர் குமரவேல் பங்கேற்று நவீன இயந்திர பொறியியலின் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடத்தினார்.கருத்தரங்கில், கல்லூரி முதல்வர் டாக்டர் லூயிஸ் டிசோஸா, கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமரவேல் மெக்கானிக்கல் துறைத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம், மெட்டாஸ் அமைப்பைச் சேர்ந்த மெக்கானிக்கல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை மெக்கானிக்கல் துறை மாணவர் விவேக் செய்திருந்தார்.மாணவர் பப்திஸ்ட் நன்றி கூறினார்.