பெண் பார்க்க வரவழைத்து மோசடிமணமகன் தாயிடம் 21 சவரன் "லபக்'
பெண் பார்க்க வரவழைத்து மோசடிமணமகன் தாயிடம் 21 சவரன் "லபக்'
பெண் பார்க்க வரவழைத்து மோசடிமணமகன் தாயிடம் 21 சவரன் "லபக்'
கண்ணூர்:பெண் பார்க்க வாருங்கள் என, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கேரளாவுக்கு வரவழைத்து, மயக்க மருந்து கொடுத்து மணமகனின் தாயிடமிருந்து 21 சவரன் நகைகளை லபக்கிய, மணமகளின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குணபாட்டி கோபால ரெட்டி.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் ரெட்டி மற்றும் ஸ்ரீகாந்த் ரெட்டி ஆகியோர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.தங்களது சகோதரி கேரள மாநிலம் கண்ணூரில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நீங்கள் அங்கு வந்தால் பெண் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என அன்பொழுக பேசினர். அவர்களது மரியாதையான பேச்சுக்களை கேட்டு மகிழ்ந்த கோபால் ரெட்டி தம்பதியினர் 11ம் தேதி அவர்கள் சொன்னபடி, கண்ணூர் போய் சேர்ந்தனர்.
இரவு உணவின்போது, மகேஷூம், ஸ்ரீகாந்த்தும் மயக்க மருந்து கலந்த இனிப்புக்களை வழங்கினர். அவற்றை விரும்பி சாப்பிட்ட அத்தம்பதியினர் அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விட்டனர். காலையில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கோபால் ரெட்டியின் மனைவி அணிந்திருந்த 21 சவரன் நகைகள், விலை மதிப்புள்ள கடிகாரம் காணவில்லை.