/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைதுசோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது
சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது
சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது
சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஆக 16, 2011 06:14 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் வாகை முத்தழகன்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க., இவரை கட்சியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் கடந்த ஜூலை 30ம் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அ.தி.மு.க.,வை விமர்சித்து பேசினார். இது குறித்து அ.தி.மு.க.,வின் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முத்தழகன் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பேசுவதற்காக உதயகுமாரை சந்தித்தார். அப்போது இரு தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வாகை முத்தழகனை கைது செய்தனர்.