Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அக்கம் பக்கம்/அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

PUBLISHED ON : செப் 02, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

ஜெகனுக்கு ஏற்பட்ட வயிற்றெரிச்சல்



தன் மீது, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட காங்கிரஸ் மேலிடத்தின் மீது, உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கிறார், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.

இதனால், ஆந்திரா முழுவதும் சென்று, காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார்.காங்கிரசில் சிரஞ்சீவி சேர்ந்ததால் தான், காங்., மேலிடத்துக்கு நம் மீது பயம் இல்லாமல் போய் விட்டது என, ஜெகன் உறுதியாக நம்புகிறார். எனவே, சிரஞ்சீவியை, காங்கிரசில் இருந்து, எப்படியாவது கழற்றி விட வேண்டும் என, மறைமுக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.காங்கிரசுக்கும்,சிரஞ்சீவிக்கும் இடையே சிண்டு முடிந்து, அதில் நாம் குளிர் காயலாம் என, ஜெகன் நினைக்கிறார்.



இதற்காக, சிரஞ்சீவி மீது, திடீரென பாசமழை பொழிவது போல், அதிரடியாக அரசியல் அறிக்கை ஒன்றை, சமீபத்தில் விட்டார்.அதில், 'தயவு செய்து காங்கிரசை நம்பாதீர்கள். அது ஒரு பெருங்கடல். காங்கிரசுடன் உங்கள் கட்சியை இணைப்பது என்பது, சுனாமியை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். காங்கிரசில் உள்ளவர்கள், தேவைக்கு ஏற்ப உங்களை பயன்படுத்திக் கொண்டு, பின், செல்லாக்காசாக்கி விடுவார்' என, ஜெகன் கூறியிருந்தார்.



சிரஞ்சீவி வட்டாரத்தில், இந்த அறிக்கை, பெரும் அதிர்வலையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, காமெடியை ஏற்படுத்தியுள்ளது. சிரஞ்சீவி ஆதரவாளர்கள் கூறுகையில், ' இதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம். ஜெகன் வயிற்றெரிச்சலில் உளறுகிறார். அவருக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இப்போ, அவர் வெறும் காமெடி பீஸ் தான்' என, எக்குத் தப்பாக கிண்டலடிக்கின்றனர்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us