தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்
தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்
தி.மு.க., மனு விசாரணைக்கு உகந்தது அல்ல : அரசு வாதம்
ADDED : செப் 14, 2011 05:29 PM
சென்னை : தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது அரசியல் சாசன 15வது சட்டப்பிரிவிற்கு எதிரானது என்றும், தி.மு.க.,வினரை பழிவாங்கும் நோக்கத்திலேயே இந்த பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, தி.மு.க.
வக்கீல் பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான விசாரணை நாளை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். அரசு தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.