ADDED : ஆக 11, 2011 05:22 AM
அவிநாசி:வடுகபாளையத்தில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை திறக்க வேண்டுமென
மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் கிளை மாநாடு, சமுதாய
நலக்கூடத்தில் செல்வராஜ், மாரம்மாள் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர்கள்
சுப்ரமணி, ராமசாமி வேலை அறிக்கை வாசித்தனர்.'வடுகபாளையத்தில்
மூடிக்கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்; சாக்கடை, சாலை வசதி, தொகுப்பு
வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்,' என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கிளை செயலாளர்களாக சுப்ரமணி, ராமசாமி ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.


