Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்

ADDED : ஆக 28, 2011 01:20 AM


Google News

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.

இக்கோவில் ஆவணித் திருவிழா ஆக.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆவணித் தேரோட்டம், பத்தாம் நாளான இன்று காலை 6 மணியளவில் நடக்கிறது. சுவாமி குமரவிடங்கப்பெருமான், அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி, ரத வீதிகளைச் சுற்றி வந்து நிலை சேருவார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us