Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

ADDED : ஜூலை 30, 2011 03:16 AM


Google News
மதுரை: மதுரை திடீர் நகரை சேர்ந்த அ.தி.மு.க.,நிர்வாகி ராமச்சந்திரன், 52.

இவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். இவர் கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள இடத்தில் கட்டடம் கட்டுகிறார். அதே பகுதியில் நம்பி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தையும் ராமச்சந்திரன் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக்கூறி, சிற்றம்பலம் என்பவர் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை போட்டோகிராபர் சேவியருக்கு தகவல் தெரிவித்தார். நேற்று, சேவியர் அப்பகுதியில் போட்டோ எடுத்தார். அவரையும், சிற்றம்பலத்தையும் ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோபி 35, ரஜினி மன்ற நிர்வாகி இளங்கோமணி 40, கம்பி, கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். சிற்றம்பலம், சேவியர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ராமச்சந்திரன், இளங்கோமணி, கோபியை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us