/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஓட்டுச்சாவடி மையம் அதிகாரி நேரில் ஆய்வுஓட்டுச்சாவடி மையம் அதிகாரி நேரில் ஆய்வு
ஓட்டுச்சாவடி மையம் அதிகாரி நேரில் ஆய்வு
ஓட்டுச்சாவடி மையம் அதிகாரி நேரில் ஆய்வு
ஓட்டுச்சாவடி மையம் அதிகாரி நேரில் ஆய்வு
ADDED : ஆக 19, 2011 11:31 PM
பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்.,ல் உள்ளாட்சி தேர்தலுக்கானஅமைக்கப்பட்டுள்ள
ஓட்டுச்சாவடி மையங்களை சென்னை டவுன் பஞ்.,களின் இயக்குநர் நேரில் ஆய்வு
செய்தார்.
பாபநாசம் டவுன் பஞ்.,ல் 18 வார்டுகள் உள்ளன. வருகிற உள்ளாட்சி
தேர்தலை முன்னிட்டு இங்கு 18 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களை சென்னை டவுன் பஞ்.,களின் இயக்குநர் கணக்கு அலுவலர் சுலோச்சனா
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓட்டுச்சாவடி மையங்களில் தேவையான
குடிநீர், கழிப்பிடம், மின்வசதி, மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க தேவையான
சாய்வு மேடை, வசதிகள் அமைத்து தர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது, தஞ்சை மண்டல டவுன் பஞ்.,கள் உதவி இயக்குநர்
பாலசுப்பிரமணியன். பாபநாசம் டவுன் பஞ்., செயல் அலுவலர் சௌந்திரநாயகி,
உடனிருந்தனர்.


