ADDED : செப் 24, 2011 12:56 AM
பீட் : மகாராஷ்டிரா மாநிலம், பார்லி ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த ஐதராபாத்- அவுரங்காபாத் ரயிலில் திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதனையடுத்து, மக்கள் அங்கு சென்று ஒவ்வொரு பெட்டியாக சென்று பார்த்ததில், ஒரு பெட்டியில் பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டனர். குழந்தை துணியால் சுற்றப்பட்டு இருந்தது. மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.