Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முறைகேடுகள் தவிர்க்க மகளிர்குழுக்களுக்கு அடையாள அட்டை திட்டம் செயல்படுமா

முறைகேடுகள் தவிர்க்க மகளிர்குழுக்களுக்கு அடையாள அட்டை திட்டம் செயல்படுமா

முறைகேடுகள் தவிர்க்க மகளிர்குழுக்களுக்கு அடையாள அட்டை திட்டம் செயல்படுமா

முறைகேடுகள் தவிர்க்க மகளிர்குழுக்களுக்கு அடையாள அட்டை திட்டம் செயல்படுமா

ADDED : செப் 01, 2011 09:06 PM


Google News

விருதுநகர் : தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் முறைகேடுகள் தவிர்க்க அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

முறைகேடுகள்: தமிழகத்தில் இரண்டரை லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில் மகளிர் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் குழுக்களுக்கு கடந்த அரசு அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்தியது. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை செயல்படுகின்றன. இதற்கு பின்பு அரசின் சலுகைகளான சுழல்நிதி மானியம், மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிந்தவுடன் இயங்கி வரும் மகளிர் குழுக்களை கலைத்து விட்டு புதிய உறுப்பினர்களை சேர்த்து அடுத்த புதிய குழு உருவாக்கப்படுகிறது. மீண்டும் சுழல்நிதி, மானியக்கடன் பெறுகின்றனர். அடையாள அட்டை:அரசின் சலுகைககள் பயன்படுத்துவதற்கு இது போன்ற முறைகேடுகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. இதனை தவிர்க்க அரசு புதிய 'சாப்ட்வேர்' உருவாக்கி மகளிர் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு மட்டும் அனைத்து உறுப்பினர்கள் கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் உறுப்பினராக உள்ளவர்கள் அடுத்த மகளிர் குழுவில் சேரும் போது அவரது படத்தை கம்ப்யூட்டர் காட்டி கொடுத்து நிராகரிக்கும். தொண்டு நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் இயங்கும் மகளிர் குழுக்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படவில்லை,. மகளிர் திட்டத்தில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மகளிர் குழுக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தற்போதைய அரசு மகளிர் குழுக்கள் அனைத்துக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி முறைகேடுகளை தவிர்க்க முன் வர வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us