ADDED : செப் 17, 2011 09:15 AM
திருச்சி: திருச்சியில் அ.தி.மு.க.,வினரை தாக்கப்பட்ட வழக்கில் தி.மு.கவினரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க., கூட்டம் ஒன்றில் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கருணாநிதியை தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தி.மு.க.,வை சேர்ந்த மண்டி சேகர் உட்பட பலர் ஹரிகிருஷ்ணாவை தாக்கினர். ஹரிகிருஷ்ணா அளித்த புகாரின் பேரி்ல் போலீசார் மண்டி சேகர் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.