ADDED : செப் 27, 2011 12:25 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விவசாயி வீட்டில் இருந்த மண்ணுளி பாம்பை மீட்கப்பட்டது.
சத்தி, கோபிபாளையம், பாரதிநகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் வீட்டின் வாசல் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு மண்ணுளி பாம்பு கிடந்தது. சத்தி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேஞ்சர் நாகசுந்தரம், பாம்பை மீட்டு, சத்தி வனப்பகுதியில் விட்டார்.