கூடலூர் : அன்னா ஹசாரேக்கு ஆதரவாக கூடலூரில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது.கூடலூர் நகராட்சி அருகே நேற்று முன்தினம் காலை 11.00 மணிக்கு துவங்கிய ஊர்வலத்துக்கு கூடலூர் ஊழல் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பாதுஷா, கந்தையா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊர்வலத்தில், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்கி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஊட்டி - மைசூர் சாலை, பழைய கோர்ட் சாலை வழியாக சென்ற ஊர்வலம் காந்தி திடலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில், பொது நல அமைப்புகள், மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.


