லிபியா தலைநகர் டிரிபோலியை அழிக்க கடாபி திட்டம் : ரஷ்ய சிறப்பு தூதர் தகவல்
லிபியா தலைநகர் டிரிபோலியை அழிக்க கடாபி திட்டம் : ரஷ்ய சிறப்பு தூதர் தகவல்
லிபியா தலைநகர் டிரிபோலியை அழிக்க கடாபி திட்டம் : ரஷ்ய சிறப்பு தூதர் தகவல்

டிரிபோலி : ''லிபியா தலைநகர் டிரிபோலியை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால், ஏவுகணை தாக்குதல் நடத்தி, அந்நகரை அழிக்க கடாபி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், லிபியாவின் மேற்கில் உள்ள குவாலிஷ் நகரை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். டிரிபோலியிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள குவாலிஷ் நகரை கைப்பற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், கடாபியின் ஆதரவாளர்களுக்கும் இடை யே பயங்கர சண்டை நடந்தது. இதன் முடிவாக நகரை கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கைப்பற்றினர். குவாலிஷ் நகரம் வீழ்ந்து விட்டதால், தலைநகர் டிரிபோலியை எளிதில் கைப்பற்றும் வகையில், அசாபா மற்றும் கர்யான் நகரங்களை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்புடன் போரிட்டு வருகின்றனர். இதற்கிடையில், லிபியாவிற்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கேல் மெர்கெலோவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விவரம் ரஷ்ய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில், மெர்கெலோவ், ''லிபியா தலைநகர் டிரிபோலி, கிளர்ச்சியாளர்கள் கையில் வீழ்ந்தால், தற்கொலைப் படைத் திட்டம் ஒன்றை செயல்படுத்த, கடாபி திட்டமிட்டுள்ளார். அதாவது, நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி, டிரிபோலியை தகர்க்க திட்டமிட்டுள்ளார். இதை,கடாபியே என்னிடம் தெரிவித்தார். கடாபி இதுவரை ஏவுகணைகள் எதையும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை,'' என்றார்.
லிபியா தலைவர் கடாபியை வெளியேற்றி, கிளர்ச்சியாளர்களை வலுப்படுத்தும் வகையில் இஸ்தான்புலில், நேட்டோ அமைப்பு நாடுகளின் கூட்டம் நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜூப்பி, இத்தாலி வெளியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி, லிபியா ஆட்சி மாற்றக் கவுன்சில் தலைவரும், வெளியுறவு அமைச்சருமான மஹ்முத் ஜிப்ரில் ஆகியோர் கலந்து கொண்டனர்.லிபியாவில், கடாபியை எதிர்த்து போரிட்டு வரும், நேட்டோ படைக்கு, கூடுதலாக நான்கு போர் விமானங்கள் வழங்கப்படும் என்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது.