/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லைகோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
கோவில்பட்டி : கோவில்பட்டி தாலுகாவில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இணைக்கப்பட்ட இளையரசனேந்தல் பிர்காவின் அரசுத்துறை சம்பந்தப்பட்ட மாற்றங்கள் முழுமையடையாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பஞ்.,யூனியன் அலுவலகத்துடன் தொடர்புடைய கல்வித்துறை, மின்வாரியம், போலீஸ் ஸ்டேசன் போன்ற முக்கியத்துறைகள் தற்போது வரை முழுமையான மாற்றம் அடையவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாலுகா மாற்றம் செய்யப்பட்ட கிராமங்களை மீண்டும் சங்கரன்கோவில் தாலுகாவிலேயே இணைக்க வேண்டுமென வலியுறுத்தி ஒருசில தரப்பிலிருந்து முயற்சிகளும் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள முக்கூட்டுமலை வருவாய்கிராமம், கோவில்பட்டி தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முக்கூட்டுமலை கிராம பஞ்.,ன் நெல்லை மாவட்டத்திலுள்ள நடுவப்பட்டி வருவாய் கிராமம் உள்ளது. ஆகவே முக்கூட்டுமலை பஞ்.,லிருந்து, நடுவப்பட்டி கிராமத்தை பிரித்து தனிப்பஞ்சாயத்தாக ஆக்க நெல்லை மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துதல் உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நேரத்தில் பிர்கா மாற்றத்தை வலியுறுத்தியோர் தரப்பிலிருந்து கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த கோவில்பட்டி யூனியன் கூட்டத்தில் 12 கிராமங்களை நிராகரிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக இளையரசனேந்தல் பிர்கா மாற்றம் பொதுமக்கள், அரசியல்வாதிகள், சமூகஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் பட்டிமன்ற விவாத பொருளாக மாறியது. இதில் குருவிகுளம் யூனியன் குறிப்பிட்ட கட்சியின் கோட்டையாக இருப்பதால், தங்களுக்கு செல்வாக்குள்ள 12 கிராமங்களின் மாற்றத்தால் உள்ளாட்சி தேர்தலில் பதவியை இழக்க நேரிடும் எனக் கருதுவதாகவும், கோவில்பட்டி போட்டியாளர்கள் 12 கிராமங்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்குமா என நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாகவும் என்பது உட்பட்ட பல்வேறு கருத்துக்கள் எழுந்தது. இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்து விதவிதமான கருத்துக்கள் எழுந்தாலும், பிர்கா மாற்றத்திற்கு முன்பே குறிப்பிட்ட 12 கிராமங்களும் கோவில்பட்டி யூனியனுடன் இணைந்து செயல்பட வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டு இருப்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே தாலுகா மாற்றம் செய்யப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான அரசுத்துறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இதில் முதற்கட்டமாக தற்போது வரை மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் அரசுத்துறைகளின் ஆவணங்கள், கோப்புகள் மற்றும் பொறுப்புகள் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுப்பியுள்ளனர்.