Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்

வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்

வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்

வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்

ADDED : ஜூலை 15, 2011 04:23 AM


Google News
திருமலை:இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி-17., ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கான 53 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் துவங்கியது. ராக்கெட் ஏவுவது வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் 12 பேர் அடங்கிய விஞ்ஞானி குழுவினர், நேற்று அதிகாலை 4:48 மணிக்கு திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.இந்த வழிபாட்டின்போது, இன்று விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி., சி-17 ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஒன்று வெங்கடாஜலபதியின் பாதங்களில் வைத்து, பூஜிக்கப்பட்டது. பின்னர் காளஹஸ்திக்கு சென்ற விஞ்ஞானிகள், வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினர். இதன்பின், ராதாகிருஷ்ணன் தலைமையிலான விஞ்ஞானி குழுவினர், ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us