திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்
திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்
திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்
திருச்சி: உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்துள்ள அ.தி.மு.க.,வினரின் தொடர் முற்றுகையால், திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை உடனடியாக வெளியிட முடியாத நிலையில், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திணறியபோது, அ.தி.மு.க., மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர் வரை, அதிரடியாக பட்டியல் வெளியிட்டது.
திருச்சி, அ.தி.மு.க.,வில் அதிருப்தியாளர்கள் கொதிப்பு அதிகமாக இருக்கிறது.
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு மிகக்கடுமையாக இருக்கிறது. செப்., 30ம் தேதி இரவே, மாநகர் மாவட்டச் செயலர் மனோகரனின் வீட்டில் கல்வீசி, எதிர்ப்பை கட்சியினர் துவக்கி வைத்தனர்.நேற்று முன்தினம், 4வது வார்டு வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீரங்கம் பகுதிச்செயலர் திருப்பதி தலைமையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டனர்.
'தலைமை அறிவித்ததாகக் கூறி, மாவட்டச்செயலர் பரிந்துரை செய்த, அவரது ஆதரவாளர்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாற்றி, உண்மையான தொண்டர்களை வேட்பாளராக தலைமை அறிவிக்கவேண்டும்' என்று கோஷம் எழுப்பினர்.அ.தி.மு.க.,வினர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


