திருச்சி அருகே பஸ்கள் மோதல்: 14 பேர் பலி
திருச்சி அருகே பஸ்கள் மோதல்: 14 பேர் பலி
திருச்சி அருகே பஸ்கள் மோதல்: 14 பேர் பலி
UPDATED : செப் 05, 2011 06:02 PM
ADDED : செப் 05, 2011 01:46 PM

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
துவரங்குறிச்சி அருகே கோவில்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள பாலத்தில் ஆம்னி பஸ்சும் அரசு பஸ்சும் எதிரெதிரே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதியது. இவ்விபத்தில் பஸ்களில்பயணம் செய்த 7 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாயினர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்ககூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


