/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
ADDED : செப் 02, 2011 11:13 PM
பல்லடம் : மாற்றுத்திறனாளி களுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித்தொகை வழங்க தேர்வு செய்தல், மருத்துவ சிகிச்சை மற்றும் கல்விகடன் முகாம், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர் ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் தலைமை வகித்தார். பல்லடம் தாசில்தார் ஜீவா முன்னிலை வகித்தார். சமூக நலத்திட்ட துணை தாசில்தார் சரஸ்வதி வரவேற்றார். ஒன்பது பேருக்கு வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டது.
எட்டு பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. 67 பேர் கல்வி கடன் கேட்டு விண்ணப்பம் அளித்தனர்.மனுக்களை வருவாய்த்துறையினர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். தலைமையிடத்து துணை தாசில்தார் ரத்னா, வருவாய் ஆய்வாளர் துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.