/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்புகூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு
கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு
கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு
கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு
திருநெல்வேலி : கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் மேலும் வலுக்கிறது.
கவலைக்கிடம்: செப்.,11 முதல் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களில் சுமார் 20 பேர் மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று விஜயகாந்த் மேடையில் இருந்தபோதும் ஒரு பெண் மயக்கமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.
தொடரும் போராட்டம்: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூடங்குளத்திற்கு எதிரான போராட்டத்தை கன்னியாகுமரியிலும் பொதுமக்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதுகுறித்து போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை துவக்கியுள்ளோம். நெல்லை கலெக்டர் அலுவலகத்தை திங்கள்கிழமை காலையில் முற்றுகையிட உள்ளோம். மதுரையிலும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.சென்னையில் பா.ம.க.,சார்பில் போராட்டம் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் போராட்டத்தை துவக்குகின்றனர் என்றார். மாணவர்கள் படிப்பு பாதிப்பு: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, பெருமணல், உவரி, கூட்டப்பனை, கூடுதாழை என 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் மக்கள் இடிந்தரை போராட்டத்திற்குவந்துவிடுகின்றனர். இவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் பள்ளி மாணவ, மாணவிகளும் சுமார் 500 பேர் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளும் உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலுபவர்களும் உள்ளனர். இவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் அணுஉலைக்கு எதிராக மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் அனேக கிராமங்களில் மீனவர்களின் குடும்பங்கள் பட்டினியை நிலையை எட்டியுள்ளனர். உவரியில் மீனவர்களுக்காக கஞ்சிதொட்டி திறக்கப்பட்டது. இதே போல மற்ற கிராமங்களிலும் கஞ்சிதொட்டி திறக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.