/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை
"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை
"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை
"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை
ராமநாதபுரம் : 'லட்சியத்தை அடைய தூக்கம் வராத கனவு காணுங்கள்,' என்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த கலந்துரையாடலில் மாணவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை கூறினார்.
ஐந்து, ஐந்து அறிவுரைகள் : அப்துல் கலாமின் அறிவுரைகள்: நான், எனது என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். ஒரு ஆண்டில் ஐந்து பேருக்காவது எழுத படிக்க சொல்லி கொடுக்க வேண்டும். ஐந்து மரங்களை வளர்க்க உறுதி எடுக்க வேண்டும். வீடு, சுற்று புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். மது, போதையிலிருந்து ஐந்து பேரை மீட்க உறுதி மொழி எடுக்க வேண்டும். ஜாதி, மதம், மொழி பாகுபாடின்றி அனைவருடனும் சமமாக நடந்து கொள்ள வேண்டும். நேர்மையாக நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். தாய்நாட்டை நேசித்து, பெண்குலத்தை மரியாதையோடு நடத்த உறுதி பூண வேண்டும். அறிவு தீபத்தை ஏற்றி, இந்தியாவை சுடர் விட செய்ய வேண்டும்.
'எனது ஓட்டு உங்களுக்கு': மாணவி கேள்விக்கு, கலாம் நகைச்சுவை : படித்து முடித்தவுடன் வேளாண் துறை குறித்து படிக்க வேண்டும். இது குறித்து வழிகாட்ட கிராமங்கள் தோறும் குழு அமைக்க தாங்கள் முயற்சிக்க வேண்டும் என ஒரு மாணவியின் கேள்விக்கு, 'நலிவடைந்த விவசாய துறை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்' என்ற உங்களுடைய கேள்வி, 'என்னை மகிழ்விக்கிறது. நீங்கள் தேர்தலில் நின்றால், என்னுடைய ஓட்டு, உங்களுக்குத்தான்' என பதிலளித்தார்.