நெல்லையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
நெல்லையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
நெல்லையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
ADDED : ஆக 06, 2011 11:21 AM
நெல்லை : நெல்லையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் மின்சாரம் தாக்கி 3 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.
வி.கே.புதூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் டில்லியில் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஊருக்கு வந்த இவர் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தார். இதே போன்று தென்காசியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் மாரி, கட்டிட பணி மேற்கொள்ளும் போது மின்சாரம் தாக்கி பலியானார். நாங்குநேரியை சேர்ந்த குமாரும், கட்டுமான பணி மேற்கொள்ளும் போது மின்சார கருவி ஒன்றை பயன்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.