ADDED : செப் 28, 2011 03:06 PM
புதுடில்லி: ஓட்டுக்கு பணம் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுதீந்திர குல்கர்னியை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று சந்தித்தார்.
ஓட்டுக்கு பணம் வழங்கிய வழக்கில், அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்தர குல்கர்னி நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இன்று பா.ஜ., தலைவர்கள் அத்வானி, அருண் ஜேட்லி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.