Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 11, 2011 11:43 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த நெகமத்தில், கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்; அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு அறிவித்துள்ள புங்கர் பீமா இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஓய்வூதியத்தை, ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை உடனடியாக கொள்முதல் செய்து விற்க வேண்டும்; இலவச மின்சாரத்தை 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் வீரமணி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us