Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 26, 2011 10:59 PM


Google News

கடலூர் : சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி கடலூரில் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும். ஆக.2ம் தேதிக்குள் ஐகோர்ட் உத்தரவிட்டபடி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் 1,000க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் அசோகன் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஸ்டேட் பாங்க் அருகிலும், பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் ஆசோசியேஷன் சார்பில் கோர்ட் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கிள்ளை: சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரில் 1,500க்கும் மேற்பட்ட வகுப்பை புறக்கணித்தனர். இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள் பேசினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us