Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இரு விபத்து இருவர் பலி

இரு விபத்து இருவர் பலி

இரு விபத்து இருவர் பலி

இரு விபத்து இருவர் பலி

ADDED : ஜூலை 11, 2011 02:45 AM


Google News

பெருந்துறை: கம்புளியம்பட்டி ராசாகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (47); விவசாயி.

பெருந்துறைக்கு டி.வி.எஸ். மொபெட்டில் வந்த போது, சரளை அருகே பின்னால் வந்த வேன் மோதி இறந்தார். பெருந்துறை எஸ்.ஐ., குணசேகரன் விசாரிக்கிறார். மற்றொரு சம்பவம்: ஈரோடு அருகிலுள்ள அணைக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் ஆறுமுக கவுண்டர். இவரது மனைவி ராமாய்யாம்மாள் (65), மகன் கந்தசாமி (40) ஆகியோர் பைக்கில் சென்றனர். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராமாயாம்மாள் இறந்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us